search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்கி விழுந்து சாவு"

    • வந்தவாசி அரசு பள்ளியில் பரிதாபம்
    • மாணவர்கள், சக ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது

    வந்தவாசி:

    வந்தவாசி தேனருவி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (56). இவர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று மதியம் பள்ளி உணவு இடைவே ளையின்போது குருமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குருமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் குருமூர்த்தி இறந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    திருபுவனம் மாவட்டம் கோதன்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (46) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திருசாடை என்ற மனைவியும், தினேஷ் பிரபு, லோகேஷ் என்ற 2 மகன்களும், திவ்யதர்ஷினி என்ற ஒரு மகள் உள்ளனர்.

    குமார் நசியனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவ னத்தில் எலக்ட்ரீனாக பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தின் அருகேவீடு வாடகைக்கு எடுத்து தங்கி மாதம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் குமார் கடந்த மாதம் சொந்த உருக்கு சென்று விட்டு மீண்டும் நசியனூருக்கு வந்துள்ளார். அவர் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு- நசியனூர் ரோட்டில் குமார் மயங்கிய நிலையில் விழுந்து இறந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவரது உடலை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி திருசாடைக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி சம்பவ இடத்துக்கு வந்து போலீசில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • திடீரென மயங்கி கீேழ விழுந்தார்.

    கோவை,

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள கிளிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 27). பிளம்பர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீேழ விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மகேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மகேஷ்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார்.
    • ருகில் இருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (வயது 62). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது உண்ணி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உண்ணி கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது மனைவி வல்சலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தொழிலாளியை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் சித்தா கிராமம் பகுதியை சேர்ந்தவர் காளிசரண்பஹார். இவர் பெருந்துறை, பணி–க்கும்பாளையம் பகுதியில் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக மகன்கள் சேகர்பகர், சசாங்காபகர் ஆகியோருடன் பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    இதில் மகன் சேகர்பகர்க்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென சேகர்பகர் மயங்கி விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×